Saturday, October 11, 2008

ஆத்மா...!

பொய்யான பூமியிலே
புரியாமல்
பிறந்திட்டாய்-உன்
பூத உடல்
போய் சேரும்
நாளதையும் மறந்திட்டாய்..!

சதையுண்ணும்
செம்புழுக்கு சரீரத்தை
வளர்த்திட்டாய்-இவ்
உண்மைதனை
அறியாத்தான்-உன் அன்னை
உனை ஈன்றிட்டாள்..!

மண்ணுலகின்
புகழென்னி வின்னிலேயும்
பறந்திட்டாய்-உன்
பேராசை காரணத்தால்
சொத்ததையும்
சுமந்திட்டாய்..!

சொப்பனத்தில்
நீ நிறைந்து
சுதந்திரமாய் திரிந்திட்டாய்-சொற்ப
வாழ்வு ஆயுள்தனை
சிகரமென
நினைத்திட்டாய்..!

உலக உறவினிலே
நீ மிதந்து
உல்லாசத்தில்
உறைந்திட்டாய்-நீ
உறங்கப் போகும் நேரமதை
உண்மையிலே மறந்திட்டாய்...!

No comments: