விடுதலை கால
தியாகிகளே..
நீங்கள்
பெற்று தந்த சுதந்திர
கொடியை
நாங்கள்
விண்ணில் பறக்க
செய்யும்
இன்று மட்டும்..
ஏன்
உங்கள் ஆத்ம
கொடிகளை அரை
கம்பத்தில்
பறக்கச் செய்கிறீர்கள்..!!
--------
விடுதலை
தருவதற்காகவே
சில நிமிடம்
தன்னில்
சிறை வைத்திருக்கின்றன
மலர்களை
தேசிய கொடிகள்...
கொடுப்பதற்கு முன்
வதைத்துவிட்டு
கொடுத்து சென்ற
வெள்ளையனை போன்றே..!!
No comments:
Post a Comment