Sunday, October 12, 2008

சுடாத சுடர்!

ஒரு முறைச் சொல்..!
ஓங்கிச் சொல்..!!

மதியையும் மனதையும்
இணைத்து
ஒருமித்துச் சொல்...

மதமில்லை என்னில்..!

ஆம்!
மதத்தால்
மகிழ்வில்லை
இம் மண்ணில்-எனவே
இனி
மதமில்லை என்னில்..!

தீபம் வேறு..
தீப் பந்தம் வேறு!

ஒளிர்வதில்
மிளிர்வது தீபம்
எஞ்சியது விளக்கு
அஞ்சுவது தீ...

நீ
அகலில் மிளிரும்
தீபமாய் இரு!
காற்றில் தாவி
காட்டுத் தீயாகாதே..!

மதம் கொண்டு
துவம்சம் தீர்க்கும்
யானை குணம்
கொண்டோன் அல்ல நீ..!

மனிதா..!
மதம் ஏன்..
மாசு ஏன்...

சினத்தை தூண்டும்
மதங்கள் இடித்து
மாசு அகற்றுவோம்..!

அறம் கூறும்
அப்பை தெளித்து
நட்பை புகட்டுவோம்..!

வேதங்கள் சொல்லும்
நீதங்கள்
ஆயிரம் ஆயிரம்-அதில்
மதங்கள் பூசிய
வெளிப் பூச்சுக்களை
சுரண்டி எறிவோம்..!

இரண்டுங் கெட்டான்கள்
இடையில் வந்து
இடைச் செருகும்
போதங்களை
சுட்டெறிப்போம்..!

நட்பைக் கொண்டு
ஒன்றாய் நின்று
பகைமையை விரட்டி
சமத்துவத்தின்
பாலம் அமைப்போம்..!

புன்னைவனப்
பொய்கையாய்..
பூக்களை கொய்யாத
புது உலகம் படைப்போம்..!

அதில்
வெப்பமின்றி
வெளிச்சம் தரும்
சுடாத சுடர்
நீ..!

No comments: