பிறந்தவள்
பெண்ணெனவே..
தன்னினம் ஈனமென
தானீன்ற
தவக் குழந்தை
தனக்கே பாரமென...
நெஞ்சம் துளிர்த்த
ஈரம் துடைத்து..
நெல் மணியும்
கள்ளிப் பாலும்
வரப்போரம்
சுமந்துச் சென்றாள்..
தன் சேயழிக்கத்
தாயொருத்தி..!
அதே வயலில்
அவளின்
அதே சுவட்டில்
கால் பதித்து...
தன்
கண்ணிழந்த
குருட்டுக் கன்றுக்கு
கால் நடக்கக
கற்றுத் தர..
தன்
வால் கொடுத்து
நடத்திச் சென்றதோர்
தாய் பசு...
தாணியங்களை
தானுண்டு..
தன் கன்றுக்கு பாலூட்ட..!
No comments:
Post a Comment