Saturday, October 11, 2008

மாய(சு)தந்திரம்.

விடுதலை கால
தியாகிகளே..

நீங்கள்
பெற்று தந்த சுதந்திர
கொடியை
நாங்கள்
விண்ணில் பறக்க
செய்யும்
இன்று மட்டும்..

ஏன்
உங்கள் ஆத்ம
கொடிகளை அரை
கம்பத்தில்
பறக்கச் செய்கிறீர்கள்..!!
--------

விடுதலை
தருவதற்காகவே
சில நிமிடம்
தன்னில்
சிறை வைத்திருக்கின்றன
மலர்களை
தேசிய கொடிகள்...

கொடுப்பதற்கு முன்
வதைத்துவிட்டு
கொடுத்து சென்ற
வெள்ளையனை போன்றே..!!

ஆத்மா...!

பொய்யான பூமியிலே
புரியாமல்
பிறந்திட்டாய்-உன்
பூத உடல்
போய் சேரும்
நாளதையும் மறந்திட்டாய்..!

சதையுண்ணும்
செம்புழுக்கு சரீரத்தை
வளர்த்திட்டாய்-இவ்
உண்மைதனை
அறியாத்தான்-உன் அன்னை
உனை ஈன்றிட்டாள்..!

மண்ணுலகின்
புகழென்னி வின்னிலேயும்
பறந்திட்டாய்-உன்
பேராசை காரணத்தால்
சொத்ததையும்
சுமந்திட்டாய்..!

சொப்பனத்தில்
நீ நிறைந்து
சுதந்திரமாய் திரிந்திட்டாய்-சொற்ப
வாழ்வு ஆயுள்தனை
சிகரமென
நினைத்திட்டாய்..!

உலக உறவினிலே
நீ மிதந்து
உல்லாசத்தில்
உறைந்திட்டாய்-நீ
உறங்கப் போகும் நேரமதை
உண்மையிலே மறந்திட்டாய்...!

நாட்டின் வளம்..(நட்பும்,நல்லுறவும்)

ஆற்றங்கரை ஆல விழுதின்
தூளியாட்டத்தில்
தூக்கி விட
தோள் தந்ததில்
துவங்கிற்று
எங்கள் தோழமை..

ஆற்று மணலில்
ஊற்று பறித்து..
கலங்கள்களை
கையால் இரைத்து
முத்தாய்...
தெளிந்த நீரில்
முகம் கண்டோம்
முழு நிலவின்
முதல் பிறையாய்...

காலை பொழுதின்
காணிக்கையாய்..
புல் வெளியின்
உச்சி முகர்ந்த பனிப்பூக்கள்
பாதம் தொட..
சில்லிடும் பரவசத்தில்
சிலாகித்து சிறகடித்தோம்
நட்பாய்..

மாமர அணிலோடும்..
மரங்கொத்தி கிளியோடும்..
மாம்பூவிடை வடுவோடும்..
அதிலாடும் காற்றோடும்
கலந்து கதை பேசி
நட்பின் மொழியறிந்தோம்...

மதம் மறந்து
இருபாலின் இனம் மறந்து
அகத்திரை இடைவெளி க்ளைந்து
நட்பின்பால் இறுகினோம்
நட்பே பாலாய் பருகினோம்...

திருவிழா காலங்களில்
பெரும் விழா எமதாகும்.
நடப்பதெல்லாம்
மதச் சடங்கு..
நட்பாய்-அதில்
எம் பங்கு பல மடங்கு...

அம்மனுக்கு அர்ச்சணையாம்
பூ பறிக்க
எனை அழைப்பாள்
அகம் மகிழ துணை செல்வேன்..

கார்த்திகை திருவிளக்காம்
நெய் அகலில் அவள் வார்க்க
அதில்
தீபவொளி ஏற்றிடுவேன்...

தை திருநாள் வந்துவிடின்
இனிமை பொங்க
வலம் வருவோம்-இனிய
கரும்பு சுவையுடனே...

என் வீட்டு
பிரார்த்தணைகளில்
அவள் கலந்து..
கையேந்தி வழி மொழிவாள்
தலை போர்த்தி
வழிபடுவாள்...

அயோத்தியில் மசூதி
அரக்கர்களால் தகர்க்கபட்ட
இருள் செய்தி அறிந்திடவே
உயிர் துடிக்க வலி கண்டாள்
மணம் இடிந்த நிலை கொண்டாள்...

போர் தொடுக்கும்
மணங்களை வென்று
பூ தொடுப்பதே
நட்பின் வேதம்...

அகிலத்தின் அகராதியில்
ஆணும் பெண்ணும்
பஞ்சும் நெருப்புமாம்..

நனைந்த பஞ்சும்
அணல் கக்காத
அகல் விளக்குமாய்..
பக்கத்தில் இருந்தும்
பத்திக் கொள்ளவில்லை நாங்கள்...

திட்டு திட்டாய்
தேங்கி கிடக்கும்-காம
கருங்குட்டைகளுக்கு அப்பால்..
கட்டுடைந்த கடலாய்
எங்கள் நட்பின் சமுத்திரம்...

வலம் வரும்
நவ கிரகங்களுக்கெல்லாம்
சிகரமாய்...
வானத்தின் கூரையாம்
எங்கள்
நட்பின் உயரங்கள்...

நாங்கள் நடையால்
அளந்த மண்ணும்..
நட்பால் பதித்த
கால்சுவடும்..
பாறையில் பொறித்திட்ட
காரை எழுத்துக்களும்...
காலத்தால் அழியாமல்
கவி பாடும்..
நட்பே உயர்வென
கதை பேசும்..!

மத இன
பேதங்களுக்கு தாழிட்டு,
நட்புக்கு..
தடம் அமைக்க
தளம் காண்போம்..
நாட்டின் உயர்வுக்கு
வழி காண்போம்..!

Sunday, September 28, 2008

உளிச் சத்தம்

நேற்றை துலக்கு
இன்றை துவக்கு
உனை இயக்கு...
நேற்றைய வீழ்ச்சியில்
நாளைய வெற்றியை படி..!

தோல்வியை தொடு
துயரங்கள் தீண்டு
எழு...
மீண்டு வந்து
உயரங்கள் காண்..!

கேள்விகள் புணை
வேள்விகள் சிதை
சிந்தி...
புதிர்களை உடைத்து
விடைகளை உதிர்..!

ஆக்கங்களை அறிவால் ஆழ உழு
உணர்வுகள் விதை
வேர் விடு...
மனித இதயங்கள் இறங்கி
மலராய் சிரி..!

உன்னை முறை படுத்து
உன் செயல் நெறி படுத்து
செயல் படு...
விதியை வழி நடத்தி
விதியின் விதியாகு..!

மனதை தாழிடு
மதியை தூரெடு
பின் திற...
வாழ்வியலின் வரை படத்தில்
உன்னியல் தேடு..!

முன்னோருக்கு வழிபடு-அவர்தம்
பேதமைக்கு முரண்படு
புறப்படு...
சமூகம் பயணித்த
தேய் பழுதை சீர் செய்..!

மூடத்திரையை கிழித்தெறி
மடமை கூரையை பிரித்தெறி
வானம் பார்...
மூடிக்கிடக்கும்
உன் விடியலை திற..!

மதங்கள் அகற்று
மனிதம் பேனு
வேகம் விரை...
புராணங்களை புறக்கணித்து
புது வேதம் எழுது..!

சாதிகள் ஒழி
சமத்துவம் மொழி
பேதமழி...
புரட்சிகள் ஏற்றி
புதிய பாரதம் செய்..!

தாய் மண் நேசி
தலைவர்களை வாசி
மரபுகள் படி...
எத்தேசம் சென்றாலும்
இந்தியனாய் நில்..!

ஒற்றுமை ஓது
நட்பை போதி
பன்பை பழக்கு...
தீண்டாமைக்கு தீயிட
தீச்சட்டி எடு..!

சொல் அம்பு தவிர்
பகமை நான் அறு
சினவில் நிமிர்...
போர்களம் அழித்து-மனதை
பூவணமாக்கு..!

ஆயுதம் முறி
யுத்தங்கள் வெறு
அகிம்சை ஏந்து...
அம்புகள் தவிர்த்து...
அன்பால் வெல்..!

உன்னிலை மற
உள் மனம் திற
பொதுவாகு...
நான் என்ற அகம் கலைந்து
நாம் என்ற சுகம் உணர்..!

முழக்கங்கள் விடு
முயற்சியால் தொடு
நம்பிக்கை நடு...
நாளையை படைக்க
இன்றை நீ விதை..!

உன் கை நம்பு
உண்மை உன் பலமாக்கு
உழை...
வெற்றிச் சிகரத்தை
எட்டி பிடி..!

எளியோர் துயர் உள் வாங்கு
அவரிடத்தில் நீயாய் கொள்
தோள் கொடு...
உன் நலம் துறந்து
பிறர் நலம் பேனு..!

ஆழ் மனம் இறங்கு
மிருகங்கள் விரட்டு
செப்பனிடு...
மான்புகள் ஓங்க
மனிதங்கள் நடு..!

தேக்கங்கள் அகற்று
நீக்கங்கள் செய்
வழிந்தோடு...
கடந்து காட்டாறாகி
உய்ந்து ஊற்றாகு..!

சிந்தையை தீட்டு
விந்தைகள் செதுக்கு
தீயவை சிதை...
சிற்பி நீயாய் சிற்பம் உன் மனமாய்
சிறந்து சிற..!

உணர்வுகள் ஒலிக்கட்டும்
உளிச் சத்தமாய்..
உள்ளங்கள் திலங்கட்டும்
ஒளிச் சிற்பமாய்...!

Friday, September 26, 2008

வாரீர்...வடம் பிடிக்க..!

ஒற்றுமை என்னும்
உறுதி மொழியை
அடித்தளமாய் கொண்டு...

சமுதாயமெனும்
தலையாய தூண்களை
நிலை நாட்டி...

மொழிகளால் மெருகூட்டப்பட்ட
மானில
கூரைகளால் வேய்ந்து...

சீரான சட்டங்களையும்,
மகத்தான மரபுகளையும்,
மனிகளாய் கோர்த்து...

மனிதம்..
நேர்மை..
பன்பாடு..
கலாசரம் போன்ற
மலர்களால் அலங்கரித்து...

வீரமெனும்
அச்சாணியை கொண்டு
விவேகமெனும்
சக்கரங்கள் நிறுவினோம்...

உறுவானது
பாரதமெனும்
அழகான தேர்..!

பன்படுத்தபட்ட தேரில்
பக்குவ படுத்தி
திரிக்கப் படாத வடமாய்
பிரிந்த நிலை சமூகம்...

இழுக்கப் படாத தேரை
இயக்கி பார்க்கும்
ஆசையில்..
திட்டமிட்டு
நுழைந்த ஆங்கிலேயன்...

பிறகென்ன,
போராட்டம்..
சிரைச்சாலை..
சிரமங்கள்.. சித்ரவதைகள்...
ஆக்கிரமத்தின்
சர்வாதிகாரத்தில்
அலைக்கழிக்க பட்டது
மனிதம்..!

கல்லுடைத்தும்..
செக்கிழுத்தும்..
சிரமங்களுக்கிடையே
நசுக்க பட்டது
நேயம்..!

பாரத தேரோடு
பரிவாரங்களையும்
பறி கொடுத்து
பரிதாபத்தில் பதறியபடி
சமூகம்..!

சூழ் நிலையை
கண்டுணர்ந்து..
வீரத்தால் வெகுண்டெழுந்து..
வீர முழக்கங்களை
முன் வைத்து,
வன்முறைகளை
பின் தள்ளினோம்...

சத்தியம் அகிம்சை
என
அற வழியில் போராடி
முயற்சித்தோம் முடிசூடினோம்..
முடிவானது
சுதந்திரம்..!

இன்று...

பொன் விழா கண்ட
மதி மயக்கம்..!
வறட்டு வாதங்களால்..
சாதி மத
பேதங்களால்..
மீண்டும்
பிரிந்த நிலை சமூகம்..!

வலுவிழக்கிறது
வடம்..!

ஊர் இரண்டு பட்டால்
கூத்தாடிக்கு
கொண்டாட்டமாம்...

குதூகலிக்கும் கூத்தாடியாய்
அன்று
ஆங்கிலேயன்...
இன்று
அன்டை நாட்டுகாரன்..!

வாரீர்..
ஒற்றுமையெனும்
தேரை பற்றி பிடிப்போம்..!
ஊர் கூடி
தேரிழுப்போம்..!

புயலே...தென்றலாய் வா!

அடை மழைக்கு முன்
பெய்யும்
அழகான தூறல்...

புயலுக்கு முன்
வீசும்
புழுதி சேரா காற்று...

இடி ஓசைக்கு முன்
இமைக்கும்
இளம் மின்னல்...

கொந்தளிப்புக்கு முன்
குதூகலித்த
கடலின் சிறு அலை..!

தூறலும் தென்றலும்
மின்னலும்
அலைகளும்...
ஆழ் மனதை ஆட்கொள்ளும்..!

அழுத்தங்கள்
அடர்ந்துவிடின் அவையெல்லாம்
அழிந்து விடும்..
போராளியின் முன் புழக்க
பொற் குணங்களாய்..!

வேண்டும் மீண்டும்...
திரை கொண்ட
மறை முகத்தின்
முன் தோன்றிய மலர் முகங்கள்!

வேண்டும் மீண்டும்...
ஆயுதத்திற்கு முன்
அன்பை ஏந்திய
அழகான பூக்கரங்கள்!

வேண்டும் மீண்டும்...
சகதியாவதற்க்கு முன்
வீசிய
சந்தன வாசம்!

வேண்டும் வேண்டும்...
என்
மரணத்திற்கு முன்
இந்த மெல்லிய நேசம்..!

எங்கே சமத்துவம்...

அழகிய நகரம்
அதில்...
நவீன முறையில்
அமைக்கபட்ட குடியிருப்புகள்!

ஆங்காங்கே...
வெள்ளிக் கலசம் வின்னைத் தொட
கோவிலின்
கோபுரங்களும்...

வானத்தை
முட்டி நிற்கும்
பள்ளி வாசலின்
மினாராக்களும்...
சிலுவையை சுமந்தபடி
கிருத்துவ தேவாலயங்களும்..!

சமத்துவ இந்தியாவின்
தனித்துவம் சிந்தித்து
வியந்து நிற்கையில்-
திடீரென..
கூக்குரலும் ஓலங்கலும்,
கூடவே-
வெடிச் சத்தமும்..!

ஆரவாரம் கேட்டதில்
இறை இல்லங்களினின்றும்
பட படத்தபடி...
ஒன்று கூடி
வானத்தை வட்டமிடும்
வென் புறாக்கள்...

மன கலவரம்
அடைந்த நானும்
விசாரிக்கயில் சொன்னார்கள்.
அங்கே..
மனிதர்களுக்குள்
ஏதோ மதக் கலவரமாம்...!

உள்ள குடியிருப்புகள்
அப்படியே இருக்கட்டும்.
முதலில் உள்ளக்குடியிருப்பை
சரி செய்வோம்..!