Friday, September 26, 2008

வாரீர்...வடம் பிடிக்க..!

ஒற்றுமை என்னும்
உறுதி மொழியை
அடித்தளமாய் கொண்டு...

சமுதாயமெனும்
தலையாய தூண்களை
நிலை நாட்டி...

மொழிகளால் மெருகூட்டப்பட்ட
மானில
கூரைகளால் வேய்ந்து...

சீரான சட்டங்களையும்,
மகத்தான மரபுகளையும்,
மனிகளாய் கோர்த்து...

மனிதம்..
நேர்மை..
பன்பாடு..
கலாசரம் போன்ற
மலர்களால் அலங்கரித்து...

வீரமெனும்
அச்சாணியை கொண்டு
விவேகமெனும்
சக்கரங்கள் நிறுவினோம்...

உறுவானது
பாரதமெனும்
அழகான தேர்..!

பன்படுத்தபட்ட தேரில்
பக்குவ படுத்தி
திரிக்கப் படாத வடமாய்
பிரிந்த நிலை சமூகம்...

இழுக்கப் படாத தேரை
இயக்கி பார்க்கும்
ஆசையில்..
திட்டமிட்டு
நுழைந்த ஆங்கிலேயன்...

பிறகென்ன,
போராட்டம்..
சிரைச்சாலை..
சிரமங்கள்.. சித்ரவதைகள்...
ஆக்கிரமத்தின்
சர்வாதிகாரத்தில்
அலைக்கழிக்க பட்டது
மனிதம்..!

கல்லுடைத்தும்..
செக்கிழுத்தும்..
சிரமங்களுக்கிடையே
நசுக்க பட்டது
நேயம்..!

பாரத தேரோடு
பரிவாரங்களையும்
பறி கொடுத்து
பரிதாபத்தில் பதறியபடி
சமூகம்..!

சூழ் நிலையை
கண்டுணர்ந்து..
வீரத்தால் வெகுண்டெழுந்து..
வீர முழக்கங்களை
முன் வைத்து,
வன்முறைகளை
பின் தள்ளினோம்...

சத்தியம் அகிம்சை
என
அற வழியில் போராடி
முயற்சித்தோம் முடிசூடினோம்..
முடிவானது
சுதந்திரம்..!

இன்று...

பொன் விழா கண்ட
மதி மயக்கம்..!
வறட்டு வாதங்களால்..
சாதி மத
பேதங்களால்..
மீண்டும்
பிரிந்த நிலை சமூகம்..!

வலுவிழக்கிறது
வடம்..!

ஊர் இரண்டு பட்டால்
கூத்தாடிக்கு
கொண்டாட்டமாம்...

குதூகலிக்கும் கூத்தாடியாய்
அன்று
ஆங்கிலேயன்...
இன்று
அன்டை நாட்டுகாரன்..!

வாரீர்..
ஒற்றுமையெனும்
தேரை பற்றி பிடிப்போம்..!
ஊர் கூடி
தேரிழுப்போம்..!

No comments: