அவள்
ஒழுக ஒழுக
வழங்கிக் கொண்டிருந்தாள்
தன் அழகை..
அவன்
மருகி மருகி
பருகிக் கொண்டிருந்தான்
அந்த நிலவை..
கடைசிச் சுற்று
முடிந்து,
கூடியிருந்த
உண்ர்வுச் சங்கிலிகள்
அகன்று விலகும்போது...
அறுந்து விழுந்த
ஆக்கத் துளிகளின்
அலறல் ஒலி கேட்கிறது
அந்த...
விலைமகளின்
கற்ப பூமியில்.
No comments:
Post a Comment