Friday, September 26, 2008

வன்னே..வன்னே..தலைவனே..!

தேன் துளிர்க்காமலும்
தென்றலை சுவாசிக்காமலும்
பூக்காமலே
உதிரும் மொட்டுக்களாய்..
வாழ்க்கையின்
மனமறியாது,
வசந்தத்தின் மொழியறியாது
மலர் வனமெனயெண்ணி
மத வனாந்திரத்தில்
இறங்கும் மடச் சீடர்களே...

இதோ
உங்கள்
மத தலைவர்கள்
ஓர் அறிமுகம்..!

வேதங்களால் வேலியமைத்து
வீன் வாதங்களால்
இயக்கம் தொடுத்து...
இயங்கிய மனிதனையும்
செயலிழக்கச் செய்து
மேதைகளையும்
பேதைகளாக்கும்
மா மனிதர்களாம்
இன்றைய மத தலைவர்கள்...

வான் பருந்தாய்
வட்டமிட்ட மானிடனை
வழி மறித்து...
மதமெனும் மந்திரத்தால்
மனம் மருக்கச்செய்து
சிறகை ஒடித்து-அதில்
மீண்டும் இறகு அரும்பாதிருக்க
விச பூச்சுக்கள் பூசும்
நிச மனிதர்களாம்
இன்றைய மத தலைவர்கள்...

உண்மையை
உரைப்பதாய் உரை நிகழ்த்தி...
சொல்லொன்றும்
செயல் வேறொன்றுமாய்
மனித மூளையை
சல்லடையாக்கும்
சானக்கியர்களாம்
இன்றைய மத தலைவர்கள்...

தீச் சுடரை
அகல் விளக்கென
அறிமுகம் செய்து...
அறிவீனன் ஆழ்ந்த
அவகாச இடைவெளியில்
ஆக்கிரமிப்பு நடத்தி..,
அறிவுடையோனின் ஆக்கத்திறனை
அறுவடை செய்யும்
ஆன்மீகவாதிகளாம்
இன்றைய மத தலைவர்கள்...

வேதம் வகுத்த
நல்லினக்கத்தை வேரறுத்து
வன்முறையின்
நச்சு கொடிகளை
வேத கிளையில் படரவிட்டு...
நட்பை நாசப் படுத்தும்
நற்பன்பு வதிகளாம்
இன்றைய மத தலைவர்கள்...

பாசமும் பவ்யமுமாய்
பாவனை செய்யும்
இவர்களின்
பாசத் திறையை
கிழித்தெரிந்தால்..
தெரியவரும்

உள்ளே...
நாச புழுக்களின்
வேச முகாம்கள்

No comments: