Thursday, September 25, 2008

இன்றைய உலகம்

உலகியலைக் கண்டு
இங்கே-சில
உண்மைகளை
சொல்ல வந்தேன்..

அடிப்படையில் அழகியல்தான்
அரசியலும்...
ஆன்மீகமும்...

அவரவர் தம் கொள்கைகளை
அறவழியில் கொண்டு சென்றால்
அவனியெங்கும் நரகியலாய்
நாம் காண கண்டிடுமா..

அழகான விழாக்களில்
அடிதடிகள் நிகழ்வதுவும்
அமைதியான ஊர்வலங்கள்
அலங்கோலம் ஆவதுவும்
வாக்குச் சாவடியில்
வெடிகுண்டு நிபுணர்களும்...
வணக்கத் தல நுழைவாயிலில்
ஆயுதப் பரிசோதகரும்...

தினந்தோறும் நாம் காணும்
திகிலூட்டும் செய்திகளாய்...
மனித இனம் இதுவென்றால்
விலங்கினமே மேலன்றோ...

அரசவையோ, திருச்சபையோ
அவனியிலே அவை எவையோ
வேசமிடும் பூசல்களை
வேர் பறித்தே எறிந்திடுவோம்.

நாமெல்லாம் ஓரினமாய்
நமதெல்லாம் பாரதமாய்...
நாளெல்லாம் குதூகலமாய்
நற்புடனே வாழ்ந்திடுவோம்.

No comments: