Wednesday, September 24, 2008

முன்னுரையாய்...என்னுரை...

கயமைகளை கடைந்தெடுத்து
கவியால் அதை
கொலு பிடித்து
கழுவிலேற்ற வந்து நிற்கும்
கடமையுள்ள குடிமகன் நான்...

குலவிளக்காம் பெண் அவளும்
கொப்பளித்த குமுறல்களை
கொக்கரித்து வந்து
நிற்கும்
கொழுந்து விட்ட
தீப்பந்தம் நான்...

மார்க்கம் தந்த நன்னெறியை
மாற்றி எங்கும்
மத வெறியாய்
ஆக்கி விட்ட விசமிகளை
அடையாளம் காட்ட வந்தேன்...

சமத்துவமாய் நாமிருக்க-அதில்
சாதி மதம்
கால் பதிக்க
கலைந்துவிட்ட ஒற்றுமையை
கவியாலே மீட்டு வந்தேன்.

No comments: