மலரின் ரனம் அறியாமல்
பூக்கள் பல பறித்து வந்து
பாக்களாய் பறைச் சாற்றும்
புலவனையே கவிஞன்
என்றால்..
நான் கவிஞன் அல்ல...
பெண்ணின் மனம் புரியாமல்
போகப் பொருளாக்கிவிட்டு
புற அழகை
பிதற்றி நிற்கும் பித்தனையே
புலவன் என்றால்..
நான் புலவனும் அல்ல...
புரியாத தீட்டல்களை
புது ஓவியம் என்பதைபோல்..
புழங்காத வார்த்தைகளை
புகுத்துவதே
கலை என்றால்..
நான் கலைஞனும் அல்ல...
சமூக அவலங்களை,
சமுதாய சருக்கள்களை,
சரமாறியாய் இயம்பி நிற்க..
இயந்திர வாழ்வுதனில்
இதற்கெடுத்தான் நேரமென..
இவன் யாரோ
கிருக்கன் என்றால்..
ஆம்..நான் கிருக்கன்.
No comments:
Post a Comment